மோசடி செய்யப்படாத வகையில் நவீன இலத்திரனியல் நுட்பத்துடனான அடையாள அட்டைகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ.விஜேவீர தெரிவித்துள்ளார். பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த அடையாள அட்டைகள் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நபரின் தகவல்கள் நுண்இலத்தரனியல் பொறிமுறையில் பதிவு செய்யப்படுவதால் இதில் மோசடிகள் மேற்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
ஏற்கனவே அடையாள அட்டைகள் வைத்திருப்போருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை தொடர்பான மோசடிகள், போலியான அடையாள அட்டைகளை தயாரிக்கும் முயற்சிகள் யாவும் இப்புதிய அடையாள அட்டை நடைமுறைக்கு வரும்போது அற்றுப்போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.