தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் அமைக்கபட்டுள்ள கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
கிளிநொச்சி பொன்னகரில் சொந்த காணிகளில் குடியமர்த்தப்படாமலுள்ள மக்கள் அக்காணிகளுக்கு அருகில் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி தாழ்வான நிலமாவுள்ளதால் கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்தது பாதிப்பிற்குள்ளானது. அம்மக்கள் தங்கள் காணிகளில் அமைந்துள்ள அவர்களது வீடுகளுக்குள் சென்று தங்கியிருக்க முற்பட்டபோது அப்பகுதியிலிருந்த படையினரால் அவர்கள் வெளியேற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்தபோது அம்மக்கள் தங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சமைத்த உணவுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.