மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள் ஒரே தடவையில் வெளிப்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அபாயம் ஏற்படுமோ என மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அவ்வாறு ஏற்பட சாத்தியம் இல்லை எனவும் பொதுமக்கள் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி சுனாமி ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பில் இவ்வாறு ஆற்றில் ஆயிரக்கணக்கான பாம்புகள் தோன்றியதாகவும் தங்போது அதே போல் பாம்புகள் வெளிப்பட்டுள்ளதால் மீண்டுமொரு சுனாமி ஏற்படுமோ என மட்டக்களப்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டிருந்தனர். ஆனால், இது தொடர்பாக மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.