யாழ்.நகரில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி.

நேற்று வியாழக்கிழமை யாழ்நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் பெண்ணொருவர் உயிரிழந்தார். யாழ்.காங்கேசன்துறை வீதியில் ‘எல்வ்’ ரக வாகனத்துடன் மோதுண்டு தலை வாகனத்தின் சில்லினால் நசிக்கப்பட்ட நிலையில் அவர் பலியானார்.

நேற்றுக் காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியைச் சேர்ந்த பத்திநாதன் யோகா (வயது 34) என்ற பெண்ணே உயிரிழந்தவராவார்.

சனநெரிசல் மிக்க காங்கேசன்துறை வீதியில் குறித்த வாகனம் வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனச் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனமும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *