மகிந்த சிந்தனையின் அடிப்படையில் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டமொன்று நாளை செவ்வாய் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாகவும், இக்கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திலும் நடைபெறும் எனவும் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாளை வவுனியா இறம்பைக்குளம், திருக்குடும்பக் கன்னியர்மட மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் வவுனியா மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
நாளை மறுதினம் யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் இக்கூட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்கள் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.