இடம்பெயர்ந்தோருக்கான வீடமைப்பை துரிதப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தல் -சிதம்பரம் தெரிவிப்பு

இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கையை இந்தியா கேட்டிருக்கிறது. புனர்வாழ்வு நடவடிக்கைகளின் ஓரங்கமான வீடமைப்புப்பணிகளை விரைவுபடுத்துமாறு இந்தியா கேட்டுள்ள நிலையில் மழைகாலத்தின் பின்னர் இதனை மேற்கொள்வதாக கொழும்பு உறுதியளித்திருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நேற்று சனிக்கிழமை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கோபாலபுரத்தில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலைவரம், கூட்டணி விவகாரம், இலங்கைத் தமிழர்கள் மீள்குடியேற்றப்பிரச்சினை ஆகியவை குறித்து இருவரும் பேசினர். டில்லிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருகை தந்தபோது போரினால் குடிபெயர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இப்போது கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருப்பதாலும் மழைக்குப்பின் இந்தப்பணி வேகப்படுத்தப்படும் என்று உறுதியளித்ததாக இச்சந்திப்பின்போது கருணாநிதியிடம் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *