யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பிரதேசச் செயலர்களுக்கு இன்று வியாழக்கிழமையும் நாளையுமாக இரு நாட்கள் செயலமர்வு ஒன்று தம்புள்ளையில் நடைபெறுகின்றது. காணி நிர்வாகம் தொடர்பாகவே இச்செயலமர்வு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயலமர்வு காணி அமைச்சின் உயர் அதிகாரிகளினால் யாழ்ப்பாண பிரதேசச் செயலர்களுக்கு தமிழ் மொழி மூலம் நடத்தப்.படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.