ஓமந்தையில் புகையிரதப் பாதை நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். ஜனாதிபதியின் இவ்விஜயத்தின்போது போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ எம்.பி., ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷ, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, இராணுவத் தளபதி ஜஹத் ஜயசூரிய, பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.