முகமாலைப் பகுதிகளில் அதிகளவு வெடிபொருட்கள் காணப்படுவதால் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை தாமதம்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முகமாலை, இத்தாவில், இந்திராபுரம் ஆகிய பகுதிகளில் இன்னமும் மிதிவெடி, கண்ணிவெடியகற்றும் பணிகள் பூர்த்தியடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் இப்பகுதிகள் புலிகளின் பகுதிக்கும் படையினர் நிலைகொண்டிருந்த பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளாக அமைந்திருந்த படியினால் அதிகளவு மிதிவெடிகள் இப்பகதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுவரும் நிலையில் பளைக்கு அப்பாலுள்ள இப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவது சிரமமானதாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அடுத்தமாத நடுப்பகுதியில் இவ்வெடிபொருட்கள் அகற்றப்பட்டு பளையிலிருந்து ஆனையிறவு வரையிலான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *