நிதி மோசடியில் ஈடுபட்டார் என குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, 15 ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இன்றுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.