அமைச்சர் ஜீ.எல். இன்று பிரித்தானியா பயணம்

g-l-peiris.jpgவெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இன்று 18 ஆம் திகதி பிரித்தானியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.லண்டன் நகரில் சர்வதேச மூலோபாய கற்கை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்வில் அமைச்சர் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்வு நாளை 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அமைப்பின் செயலாளர் வில்லியம் ஹெக்கின் விசேட அழைப்பின் பேரில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேற்படி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவில் புதிய அரசு ஆட்சியமைத்ததன் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

அங்கு தங்கியுள்ள காலங்களில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் உட்பட மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மாவுடனும் அவர் விசேட கலந்துரை யாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *