மட்டக்களப்பு கல்முனையில் சட்டவிரோத ஆயுங்களை ஒப்படைக்க கால அவகாசம்.

Arms_Amnestyகிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை பாதகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோத அயுதங்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 30ஆம் திகதிக்குள் இவ்வாறான ஆயுதங்களை வைத்திருப்போர் கல்முனை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள், கோவில்கள் ஆகியற்றினூடாக அவற்றை ஒப்படைக்குமாறு பொலிஸாhரால் கோரப்பட்டுள்ளது.

Arms_Amnestyமுன்னர் இம்மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னதாக சட்விரோத ஆயுத்ங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்த போதும் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து ஒரு ஆயுதம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.  இதனால், இதன் கால எல்லை இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்முனை குற்றத்தடுப்பு பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *