கிளி நொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் யுத்த அனர்த்தங்களால் உளநலன் பாதிக்கப்பட்ட மக்களில் 60 சதவீதமானவர்கள் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் என கிளிநொச்சி பொது மருத்துவமனை உளநல பொறுப்பதிகாரி மருத்துவர் மா.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை இனங்காணப்பட்ட மனநோயாளிகளில் 40 வீதமானோர் கிளிநொச்சி நகரையண்டியுள்ள கிளிநொச்சி, கனகபுரம் பாரதிபுரம், உருத்திரபுரம், ஜெயந்திநகர் முதலான இடங்களில் வாழ்கின்றனர். 60 வீதமானோர் வசதி குறைந்த கிராமங்களான பூனகரி, முழங்காவில், தருமபுரம், வட்டக்கச்சி, பளை ஆகிய கிராமங்களில் வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உளநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ள 200 பேருக்கும் மேல் கிளிநொச்சி மருத்தவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Articles:
அதிகதொகை இளம்பெண்கள் குடும்பப் பாரத்தை சுமக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கும் யுத்தம் – நீல் புனே
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
‘மன உளைச்சல் உலகில் மோசமான நோயாக உருவெடுக்கும்’ – உலக சுகாதார ஸ்தாபனம்