நாட்டில் தற்போது நிலவும் கடுங்காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கு மென்று வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. மத்திய மலைப் பகுதியின் மேற்குப் பிரதேசத்தில் கடுங்காற்று நீடிக்குமென்று வானிலை அவதானிப்பாளர் பிரீதிகா ஜயகொடி தெரிவித்தார்.
மேல் மாகாணம், சப்ரகமுவ, மத் திய மாகாணங்களிலும் தென் மாகா ணத்தின் காலி, மாத்தறை மாவட்ட ங்களில் இடைக்கிடை மழை பெய்வதுடன், கடுங்காற்றும் வீசுமென்று வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. இதேவேளை, மலையகத்தின் நீரேந்தும் பகுதிகளில் கடுங்காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.