படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இம்மாதம் 9ம் திகதி முதல் 11ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சாட்சியங்களை பதிவு செய்யப்போவதாக அறிவித்திருந்த போதும் தற்போது அது இந்நாட்களில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாணைக்குழுவின் அமர்வுகள் தவிர்க்க முடியாத காரணங்களால் நவம்பர் மாதமே யாழப்பாணத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் ஆறு இடங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதிவுகள் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.