வன்னியில் மணலுக்கு திடீர் தட்டுப்பாடு. வீடமைப்புப் பணிகள் பாதிப்பு.

வன்னியில் திடீரென மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வீடமைப்புப்பணிகள் பாதிப்படைந்துள்ளன. கடந்த காலங்களிலும், மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் வன்னியில் மணலுக்கு பெரிதாகத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஒரு உளவு இயந்திரத்தில் ஏற்றப்படும் மணலை சுமார் 2500 ரூபாவிற்கு பொதுமக்கள் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக திடீரென மணலுக்கு தட்டுப்பாடு எற்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தற்போது வீடமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மணலுக்கு எற்படுத்தப்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இப்பணிகளில் தடை எற்பட்டுள்ளதாக வீடமைப்பு பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்.குடாநாட்டில் இடம்பெறுவது போல் மணலுக்கான அனுமதி நடைமுறைகளை வன்னியிலும் கொண்டுவரும் நோக்கிலேயே மணலுக்கான தடையும், தட்டுப்பாடும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *