இந்திய வீட்டுத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இந்திய அரசினால் யாழ். குடாநாட்டில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளன. பயனாளிகள் பிரதேசச் செயலங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பாக கையளிக்க வேண்டும் என யாழ். அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தை சொந்த இடமாகக்கொண்டு 18-05-2009 இற்குப்பின் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்ந்தவர்கள், சொந்தக் காணிகளையுடையவர்கள் மட்டும் இவ்வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு பகுதியளவில் சேதமடைந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும் எனவும அவர்கள் அதனைப் புனரமைப்பதற்கு இரண்டு லட்சரூபா வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வேளை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் குடும்பங்கள், போரில் உயிரிழந்தவர்கள், காணாமல்போனவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீடமைப்பிற்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *