தென்டமராட்சியில் படையினர் எனக்கூறி ஆயதமுனையில் நகைகள், பணம் கொள்ளை!

கடந்த செவ்வாய்கிழமை தென்மராட்சியில் பட்டப்பகல் வேளையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி மட்டுவில் தெற்கில் காலை 9 மணியளவில் வீட்டில் தனித்திருந்த பெண்ணொருவரை ஆயதமுனையில் அச்சுறுத்திய கொள்ளையர்கள் பல லட்ச ரூபா பெறுமதியான நகைகள், பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாங்கள் படையினரென்றும் வீட்டை சோதனையிடப் போவதாகவும் கூறி பின், துப்பாக்கியைக் காட்டி அப்பெண்ணை அச்சுறுத்தி இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். குடாநாட்டில் கடந்த காலங்களாக நடைபெற்று வந்த கொள்ளைச் சம்பவங்கள் சற்று குறைவடைந்துள்ள போதும் அவை முற்றாக கட்டப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *