நெடுந்தீவு மேற்கு வைத்தியசாலையை 30 வருடங்களின் பின் மீண்டும் இயங்கவைக்க முயற்சி.

30 வருடங்களாக இயங்காமலுள்ள நெடுந்தீவு மேற்கு வைத்தியசாலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக இவ்வைத்தியசாலை செயலிழந்திருந்தது.

இதன் காரணமாக நெடுந்தீவு மேற்கு மக்கள் தங்கள் வைத்திய தேவைகளுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இவ்வைத்தியாசாலை மீண்டும் இயங்கத் தொடங்கினால் இம்மக்களின் சிரமங்களை குறைக்க முடியும் எனவும், இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும். நெடுந்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி செல்வி மகேஸ்வரி நன்னித்தம்பி தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *