விடுதலைப்புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் மேல்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த விடுதலைப்புலி உறுப்பினர்களால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுத் தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு சட்டமாஅதிபர் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குறித்த ஆறு விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களுக் கெதிராக கொழும்பு மற்றும் மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.