ஆனமடுவ- சிலாபம் வீதியிலுள்ள முதலிக்குளம் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஆனமடுவ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி நேற்று அதிகாலை 4.00 மணியளவில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்திலும் மரத்திலும் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்