கால்களை இழந்த 20 பேருக்கு செயற்கைக் கால்களை மக்கள் வங்கியின் இந்து மாமன்றம் வழங்குகின்றது.

போரினாலும் விபத்துக்களாலும் தமது கால்களை இழந்த 20 பேருக்கு மக்கள் வங்கியின் இந்து மாமன்றம் செயற்கைக் கால்களை வழங்குகின்றது. இன்று திங்கள் கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள ஜெயப்பூர் புனர்வாழ்வு நிலையத்தில இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கயின் தலைமையக இந்துமாமன்றத்தின் உபதலைவர், செயலாளர், யாழ்.மாவட்ட மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மற்றும், ஜெய்ப்பூர் நிறுவனப் பணியாளர்களும்  கலந்து கொண்டு கால்களை இழந்த 20 பேருக்கு செயற்கை கால்களை வழங்கி வைக்கவுள்ளனர்.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    வாழ்த்துக்களும் பாராட்டும் செய்யலாமே நாமும்;

    Reply
  • மாயா
    மாயா

    நல்லதை செய்யும் உள்ளங்களை பாராட்டியே ஆக வேண்டும். புலத்து உறவுகளும் தம்மால் இயன்றதை நேரடியாக தெரிந்தோருக்கு செய்யுங்கள்.

    Reply