வவுனியா மாவட்டத்தில் மீளக் குடியேறிய சேமமடு, பால மோட்டை கிராமங்களில் நடமாடும் சேவைகள் இன்றும் நாளையும் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படவுள்ளது.
வியாழக்கிழமை இன்று 2 ஆம் திகதி சேமமடு மகாவித்தியாலயத் திலும், நாளை 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாலமோட்டை அரசினர் பாடசாலையிலும் நட மாடும் சேவைகள் இடம்பெறுமென மாவட்ட அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.
பொது மக்கள் நடமாடும் சேவையின் போது வருகை தந்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாமெனவும் அவர் தெரிவித்தார்.