தேசிய பாதுகாப்பு தினம் இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ். அரச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சி மற்றும், பொதுமக்கள் விழிப்பணர்வு நிலைய பணிப்பாளர் நந்தரட்ண தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்;.
எதிர்வரும் 26ம் தகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் இக்கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளை நடத்துவதற்காக நேற்றைய கூட்டத்தில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. பாதகாப்பு தொடர்பான விடயங்கள் பொலிஸ், இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியப்போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கான பூரண ஒத்துழைப்பை அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், ஆகியவற்றிடம் எதிர்பார்ப்பதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அரச அதிபர், மேலதிக அரசஅதிபர், பிரதேசச் செயலர்கள், வலயக் கல்விப்பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.