சவூதி அரேபியாவின் ரியாத்தில் நிர்க்கதியான நிலையிலிருக்கும் 40 இலங் கைப் பணிப்பெண்களுள் சுகயீனமுற்றிரு க்கும் ஐவரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்டிருப்பதாக அதன் பொது முகாமையாளர் ருகுனுகே தெரிவித்தார்.
அந்நாட்டின் குறித்த வைத்தியசாலை யொன்றில் வேலை பெற்றுக் கொடுப்பதாகக் கூறி இலங்கையிலிருந்து 41 பணிப்பெண்கள் அண்மையில் ரியாத் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒப்பந்தத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவர்களுக்கு குறித்த வேலை வழங்கப்படவில்லை.
இருப்பினும் குறிப்பிட்ட மாதாந்த சம்பளத்தின் ஒரு பகுதி மாத்திரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு சென்ற ஆறு பெண்கள் சுகயீனமுற்றுள்ளனர். இவர்களுள் ஒருவர் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.