விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வாகனச்சாரதி சரணடைந்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட வாகனச் சாரதியாக நீண்டகாலம் பணியாற்றிய சதீஸ்குமரன் என்ற விடுதலைப் புலி உறுப்பினர் இறுதிக்கட்டப் போரின் போது இவர் வன்னியிலிருந்து தப்பிச் சென்றதாகவும் திருகோணமலையில் வைத்து அவர் பொலிஸாரிடம் சரணடைந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவற்றில் உண்மை இல்லை எனவும், குறிப்பிட்ட நபர் திருகோணமலையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஒரு காலை இழந்தவர் என்றும், தற்போது அவர் பொலிஸ் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.