மேல் நீதிமன்றத்தில் “வெள்ளைக்கொடி’ வழக்கு

ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவின் “வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (29) மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.வியாழக்கிழமை மேல்நீதிமன்றத்தில் ஜெனரல் சரத்பொன்சேகாவின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதிவானிடம் அரச சட்டத்தரணி நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான வெள்ளைக்கொடி விவகார வழக்கு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அத்துடன் ஏனைய கொழும்பு நீதிமன்றங்களில் பொன்சேகாவுக்கு எதிரான இரு வழக்குகளும் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *