யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக பொலிஸாரின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் சட்ட விரோதமான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள், கள்ளச்சாராய விற்பனை, கசிப்பு கஞ்சா விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் என்கிற வகையில் 29 பேரும், மது போதையில் வாகனம் செலுத்திய 15 பேரும், வீதி ஒழுங்கு மீறப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களான 62 பேரும் மற்றும் 7பேருமாக மொத்தம் 113 பேர் பொலிஸாரிடம் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்.நகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விசேட நடவடிக்கைகளில் ஒன்பது பொலிஸ் நிலையங்களிலிருந்து 200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *