நிதிக்கம்பனிகள் சட்டத்தை நீக்கிவிட நடவடிக்கை

நாட்டில் சட்டவிரோதமாக இயங்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நடைமுறையில் உள்ள நிதிக்கம்பனிகளின் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்ளவுள்ளது.

இந்த வருடம் டிசம்பரில் நடைமுறையிலுள்ள நிதிக் கம்பனிகள் சட்டத்தை மத்திய வங்கி அகற்றிவிடும் என்று விபரங்களை வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்படாத அதிகாரியொருவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார்.

உத்தேச நிதி,வர்த்தக சட்டமூலமானது சட்டவிரோதமாக இயங்கும் நிதிநிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான விதத்தில் செயற்படுவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டதாக அமையும். சக்விதி போன்ற மோசடி நிறுவனங்களிலிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *