”வன்னியில் 13 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.” பாராளுமன்றப் பிரதித் தலைவர் சந்திரகுமார்

Chandrakumar_MP_Jaffna_EPDPவன்னிப் பகுதிகளில் தற்போதுள்ளதை விடவும் மேலும் 13 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளதாக ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் தற்போது சீர் செய்யப்பட்டு வருவதாகவும், அவற்றில் எரிபொருள் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 13 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க அமைச்சர் சுசில் பிறெம்ஜெயந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *