ஆகஸ்ட் மாதத்தின் நான்கு தினங்களை தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பிரகடனப்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தினதும், இரண்டாம் வாரத்தினதும் திங்கட் கிழமையும், மூன்றாம், நான்காம் வாரங்களின் சனிக்கிழமையும் இவ்வாறு டெங்கு ஒழிப்பு தேசிய தினங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்புக்கான பணிகளை தேசிய மட்டத்திலும், மாகாண, உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் பரந்துபட்ட அடிப்படையில் மேற்கொள்ளுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.