யாழ். மாவட்டத்தில் மீளகுடியமர்த்தப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்தும் மூன்று மாதங்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா முகாம்களிலிருந்து யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான நிவாரண உணவுப் பொருட்கள் ஆறு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டதால் குறித்த மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.
இவ்வாறு நிறுத்தப்பட்ட நிவாரண உதவிகள் சம்பந்தப்பட்ட மக்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு வழங்க யாழ்.மாவட்டச் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் குறித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என யாழ்.செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.