கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை செவ்வாய் கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி முகாமிலிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர். நலன்புரி நிலையத்திலிருந்து இன்று அழைத்து வரப்பட்ட இம்மக்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கான பதிவுகள், சில நடைமுறைகள் முடிவடைந்ததும் நாளை அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். பாரதிபரம் பாடசாலை சில மாதங்களாக இயங்கி வருகின்ற போதும் அக்கிராமத்து மக்கள் தற்போதே மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெளிமாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் வசிக்கும் வன்னி மக்களின் மீள்குடியேற்றப் பதிவுகள் இம்மாதத்தில் நடைபெற மாட்டாது என கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *