குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். வந்து திரும்பிக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 6 பேர் பலியாகினர். யாழ்ப்பாணத்திலிருந்து குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்று குருநாகல் கிரியேல்ல பகுதியில் வைத்து லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலியானவர்கள் காயப்பட்டவர்கள் அனைவரும் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (June 27 2010) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருநாகலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பியவர்களுக்கே வழியில் இக்கதி ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கைப் பகுதிகளிலிருந்து வடபகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வாகனங்களை ஏ-9 வீதியில் தற்போது அதிகளவில் காணக்கூடியதாகவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.