முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு தொகுதி மக்கள் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

போரினால் இடம் பெயர்ந்து வவனியா மாவட்டத்தில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கம் முல்லை மாவட்டதைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் நாளை (28-06-2010) அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படவுள்ளனர். 195 குடும்பங்களைச் சேர்ந்த 556 பேர் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளில் இவர்கள் மீள் குடியேற்றப்படவுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் சிறீரங்கன் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *