மக்கள் மீள்குடியேற்றப்படும் பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை!

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் சில பகுதிகளில் காட்டு யானைகளினால் மக்கள் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர். வட்டக்கச்சி. இராமநாதபுரம், கண்டாவளை. கலமடுநகர் விசுவமடு. பிரபந்தனாறு முதலான பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. அங்கு மக்களின் பயன்தரு மரங்களை இக்காட்டு யானைகள் நாசப்படுத்தி வருகின்றன.

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி பொதுமக்கள் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு முகம் கொடுத்த வந்ததாகவும் தற்போது மீண்டும் யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *