மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் இன்னும் 93 குடும்பங்களைச் சேர்ந்த 433 பேர் மீள்குடியமர்த்தப்படமலுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இடம்பெயர்ந்தோர் முகாம்களும் மூடப்பட்ட நிலையில், இவர்கள் அங்குள்ள நண்பர்கள் உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இதில் கிரான் பிரதேச செயலர் பிரிவில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேரும். செங்கலடிப் பிரிவில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 221 பெருமே நண்பர்கள் உறவினர் வீடுகளில் இன்னமும் தங்கியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், 93 குடும்பங்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமலுள்ளன. கிழக்கிலும் வடக்கிலும் மக்களின் மிள்குடியேற்றம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. எனக் குறிப்பிட்டுள்ளார்.