வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித மடுமாதா ஆலையத் திருவிழா இன்று (June 23 2010) புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று ஆரம்பமான இத்திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெற்று யூலை மாதம் 2ம் திகதி திருப்பலி ஒப்புக் கொடுப்புடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடுஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி தங்குமிடம், கழிவறை, குடிநீர், உணவு போன்றவற்றிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆலயத்திற்கு வருகை தருவோர் மது பாவனையைத் தவிர்த்து புனிதம் பேணுமாறும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
வருடந்தோறும் நடைபெறும் மடு ஆலயத் திருவிழாவிற்கு இலங்கை முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களும் பல்லாயிரக் கணக்கில் வருகை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.