இந்தியாவின் பெரம்பலூர் பிரம்மரிஷிமலை புலிப்பாணி அன்னை சித்தர் ஸ்ரீலஸ்ரீ எஸ். இராஜ்குமார் குருஜீ இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். சிலோன் சித்தர்கள் சபை ஸ்ரீலஸ்ரீ புண்ணியரத்னம் சித்தரின் அழைப்பையேற்று இலங்கை வரும் இராஜ்குமார் குருஜி உலகமக்கள் சேமத்திற்காகவும், எதிர்கால நன்மை கருதியும் மகா யாகங்களை நடத்தவுள்ளார்.
இலங்கை வரும் ஸ்ரீலஸ்ரீ எஸ். இராஜ்குமார் குருஜீ நாளையும், நாளை மறுதினமும் மட்டக்களப்பில் மாபெரும் யாகங்களை நடத்தி அன்னதானம் வழங்கவுள்ளார்.
நாளை சனிக்கிழமை திருமண்டபத்தடியிலு ள்ள கன்னன்குடா 210 சித்தர்கள் பீடத்தில் காலை 10.00 மணிக்கு மகாயாகம் நடை பெறும். நாளை மறுதினம் (20) ஞாயிறுக்கிழமை களுவாஞ்சிக்குடியிலுள்ள ஸ்ரீயோகஞானபீடத்தில் காலை 10.30 மணிக்கு மகாயாகம் நடைபெறும்.