பாடசா லைகளில் அழகியற் கல்வியைக் கற்பிப்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்து ள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 3174 ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்குமுகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) முற்பகல் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனை அறிவித்தார்.
இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.