தன்னிச்சையாக அரசியலமைப்பில் மாற்றத்தை திணிக்க அரசு முயற்சி ; ரணில் கண்டனம்

ranil.jpgஜனநாயக நடைமுறைக்கு மாற்றமாக தன்னிச்சையாக அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்களின் எதிர்பார்ப்புகளைப் புறந்தள்ளி அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்கு அரசு முனைப்புக்காட்டி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

அரசியலமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பாராளுமன்றத்திலும் வெளியேயும் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெறஸ் இல்லத்தில் ஊடகவியலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் தங்களது அதிகாரத்தைப் பலப்படுத்தவும் நீடித்துக் கொள்வதற்குமாகவே அரசியலமைப்பை மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அமைச்சர்களுக்கோ, ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. பாராளுமன்றத்துக்கு விளக்கமளிக்காமல் இரகசியமான முறையில் அரசியலமைப்பைத் திருத்தி அதனை மக்கள் மீது திணிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த பிரேரணை முற்று முழுதாக நடைமுறைக்குப் புறம்பானதொன்றாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *