போலி முகவர்களூடாக மலேசியா சென்றோர் நிர்க்கதி

போலி வெளிநாட்டு முகவர் நிலையங்களினூடாக மலேசியா சென்று அங்கு நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை துரிதமாக இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது.

கூடுதல் சம்பளம் கிடைக்கும் உயர் தொழில்களை பெறுவதற்காக வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு பல இலட்சம் ரூபா பணம் செலுத்திய நூற்றுக்கும் அதிகமான இலங்கையர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இவர்கள் உரிய தொழில் கிடைக்காததால் மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக மேலதிக பொது முகாமையாளர் எம்.கே. ருகுணகே கூறினார். இவர்களில் பலர் கடவுச் சீட்டோ, பணமே இல்லாமல் வெறும் கையுடனுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பத் துறையில் அதிக சம்பளமுள்ள தொழில் வழங்குவதாக கூறி மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட இவர்கள் சிற்றூழியர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *