விக்கிர வாண்டி அருகே சித்தணி என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தண்டவாளத்தை தகர்க்க ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாமென கருதுவதாக ரெயில்வே பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெலட்டின் குச்சிகள் வழக்கமாக பாறைகளை வெடிவைத்து தகர்க்க பயன்படுத்தப்படுகின்றன. ஜெலட்டின் குச்சிகளை வைத்து மின் இணைப்பு கருவியின் மூலம் வெடிக்கச்செய்து தண்டவாளத்தை தகர்த்து இருக்கலாமென அந்த வட்டாரங்கள் கூறின.