கிளிநொச்சியில் இரு பெண்கள்மீது பாலியல் துஸ்பிரயோகம் ஆறு இராணுவத்தினர் கைது!

யூன் 6ல் கிளிநொச்சி ரெட்பானா பகுதியில் இரு குடும்பப் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் மேற்கொண்ட முறையீட்டை அடுத்தே யூன் 7ல் ஆறு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் யூன் 8ல் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் யூன் 14ல் அடையாள அணிவகுப்பிற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதணைக்காக வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *