நாவற்குழி பகுதிகளில் நள்ளிரவில் கொள்ளையிடும் கும்பலினால் மக்கள் அச்சம்!

நள்ளிரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் கும்பல் ஒன்று நாவற்குழி கிழக்கு தச்சன் தோப்பு பகுதிகளில் அண்மைக் காலமாக நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதி வீடுகளுக்குள் புகுந்த சிலர் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் பெண்களின் நகைகளை அபகரித்துக் கொண்டு ஓடிவிடுவதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான கொள்ளைச் சம்வவத்துடன் தொடர்புள்ளதான சந்தேகத்தின் பேரில் அப்பகுதி இளைஞர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறான நள்ளிரவு கொள்ளைகளில் ஈடுபடும் கும்பல்கள் குறித்த அச்சத்தினால் அப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் விழித்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *