கிளிநொச்சி கணேசபுரத்தில் மீட்கப்பட்ட ஐந்து சடலங்களும் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளதால் அவை ஆணா, பெண்ணா என கண்டறிய முடியாமலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சடலங்கள் பெண்களினது என முன்னர் செய்திகள் வெளி வந்த போதிலும் சரியாக அடையாளம் காணமுடியாத நிலையில் சடலங்கள் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அவற்றில் இரு சடலங்கள் விடுதலைப் புலிகளின் வரிச்சீருடையுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றுமொரு சடலத்தில் இராணுவச் சீருடை போன்ற தன்மை காணப்படுவதாகவும், ஏனைய இரு சடலங்களும் ஆடைகளற்று நிர்வாணமாக காணப்படுவதாகவும். நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்றின் கால் முறிந்து பனை மட்டைக் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சடலங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நீதவான் பெ.சிவகுமார், வவுனியா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிறிதரன், கிளிநொச்சி, மாங்குளம் அகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், படை அதிகாரிகள் கணேசபரம் கிராமசேவையாளர் ஆகியோரின் முன்னிலையில் நேற்று இச்சடலங்கள் மீட்கப்பட்டன.