இறுதிப் போரில் தவறவிடப்பட்ட சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது மக்கள் இடம்பெயர்கையில் தவறவிடப்பட்ட சிறுவர்கள்  தற்போது வவுனியா சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இச்சிறுவர்களை அடையாளம் காண உதவமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் போது அதிகளவிலான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் பெற்றோரால் தவறவிடப்பட்ட சிறுவர்களும் சிகிச்சைக்காக வைத்தயசாலைகளில் சேர்க்கப்பட்டு, பெற்றோர் உறிவினர்களை இழந்த சிறுவர்களும் தற்போது வவுனியா சிறுவர் இல்லங்களில் சிறுவர் நன்னடத்தை பாராமரிப்பு திணக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இச்சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு பெற்றோர்கள், உறவினர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சிறுவர்கள் பலர் நீதிமன்றக் கட்டளையின் படி சிறுவர் இல்லங்களில் பாராமரிக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 26 பேரிடம் அவர்களது விவரங்கள் எதனையும் பெற முடியவில்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாக சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களை அடையாளம் கண்டு, பெற்றோர் தொடர்பான தகவல்களை வழங்கும் போது அச்சிறுவர்களின் எதிர்கால நடவடிக்கைகளை  முறையாக மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்புத் திணைக்களம் இச்சிறுவர்களைத் தவறவிட்ட பெற்றோர்கள் அல்லது, பெற்றோரை இழந்த நிலையில் குழந்தைகளைத் தவறவிட்ட உறவினர்கள் வவுனியா மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *