கிளிநொச்சியில் கண்ணிவெடியகற்றும் வாகனம் தட்புரண்டதில் ஆறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர்!

‘ஹலோட்ரஸ்ற்’ நிறுவனத்தின் கண்ணிவெடியகற்றும் வாகனம் ஒன்று நேற்று (15th May 2010) கண்ணிவெடியகற்றும் பணியினை முடித்துக் கொண்டு அலுவலகம் திரும்பும் வழியில், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் வைத்து தடம்புரண்டது. இதன்போது இவ்வாகனத்தில் பயணித்த அறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர். ஒன்பது பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குறித்த வாகனம் சென்று கொண்டிருக்கையில், எதிரே பாடசாலை மாணவர்கள் சென்றதால் சடுதியாக வாகனம் நிறுத்தப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த பெண்பணியாளர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே வேளை, தற்போது வன்னியில் கண்ணிவெடியற்றும் பணிகளில் அதிகளவிலான தமிழ் யுவதிகள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *