ஆயுதங்களுடன் இருவர் கைது

ஆயுதங்களுடன் பயணம் செய்த இருவர் ஆனமடுவ பகுதியில் வைத்து பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி கூறினார்.  இவர்கள் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எம். 16 ரக தன்னியக்க துப்பாக்கியொன்றும் 30 ரவைகளும் மெகசின் ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குருணாகல்- புத்தளம் வீதியினூடாகப் பயணித்த வேன் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டபோதே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களுடன் குறித்த வேனும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *