மகாவலி “ஜி-27 வலயம் என்ற பெயரில் வவுனியா வடக்கில் குடியேற்ற முடிவு

மகாவலி “எச்-27 வலயத்தில் மக்கள் குடியிருப்பதற்கு காணிப் பற்றாக்குறை ஏற்பட்டுவருவதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.மகாவலி வலயங்களில் குடியிருப்பவர்களின் மூன்றாம் பரம்பரை உறுப்பினர்களுக்குக் காணிகளை வழங்க முடியாதுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிடுகிறது.

இதனால் வவுனியா வடக்கு கால்வாயை அண்மித்த பகுதிகளில் இவர்களுக்குக் காணிகளை வழங்க நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார்.மகாவலி “ஜி-27 வலயம் என இதற்குப் பெயரிட்டு இங்கு மக்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களுக்கு விவசாயம் செய்ய உரிய வசதிகள் மற்றும் உதவிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது.இதேவேளை, தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்டு விவசாயம் செய்யப்படாத காணிகளை அமைச்சு பொறுப்பேற்கவுள்ளது. இவற்றை காணிகள் இல்லாதவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *